செப்டம்பர், 2015 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2015

தரிசனப்பள்ளத்தாக்கு

பாவியாகிய மனிதனுக்கும், பரிசுத்தராகிய தேவனுக்கும் இடையே உள்ள தூரத்தை கடும் தூய்மைவாதிக் குழு (puritan) வைச் சார்ந்த மக்களின் “தரிசனப்பள்ளத்தாக்கு” என்ற ஜெபம் விளக்குகிறது. அந்த ஜெபத்தில் “என்னை தரிசனப்பள்ளதாக்கிற்கு கொண்டுவந்தீர்... பாவமாகிய மலைகளால் சூழப்பட்ட நான் உமது மகிமையைக் கண்டேன்” என்று மனிதன் தேவனிடம் கூறுகிறான். அவனது பாவத்தன்மையை அவன் அறிந்திருந்தபொழுதும் இன்னமும் நம்பிக்கையுள்ளது. “மிகவும் ஆழமான கிணறுகளிலிருந்து நட்சத்திரங்களைக் காணலாம். ஆழம் அதிகரிக்க, உமது நட்சத்திரங்கள் பிரகாசமாக ஒளிவிடும்” என்று அந்த மனிதன் தொடர்ந்து கூறுகிறான். “எனது இருள் சூழ்ந்த நிலையில்…

இருளை ஊடுருவி

நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அந்த நிகழ்ச்சியை முதன்முதலாகக் கண்டேன். பனிபெய்யும் இரவு, நகரத்திலுள்ள விளக்குகளின் ஒளியை விட்டு வெகுதூரத்தில் வைக்கோல் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் மேல், மகிழ்ச்சியோடு சத்தம் போட்டு உரையாடிக் கொண்டு சென்ற நண்பர்களோடு நான் பயணம் செய்தபொழுது, அடிவானத்தில் பலவண்ண ஒளி பளிச்சிட வானமே ஒளிமயமாக இருந்தது. நான் மெய்மறந்து போனேன், அந்த இரவுமுதல் அரோரா போரியாலிஸ் அல்லது வடதிசை ஒளி என்ற வானில் தோன்றும் அரிதான ஒளி விளைவு நிகழ்ச்சியில் கவரப்பட்டேன். பொதுவாக அப்படிப்பட்ட நிகழ்ச்சி நான் வசிக்கும்…

அதைக் கொடுத்து விடுங்கள்

பலவிதமான தேவையிலுள்ள ஏழைமக்களுக்கு உதவிசெய்யும் அநேக தொண்டு நிறுவனங்கள், தங்களது தேவைக்கும் அதிகமாக வைத்திருப்பவர்களிடமிருந்து அவர்களுக்கு தேவையற்ற துணிமணிகள், வீட்டிற்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் போன்ற நன்கொடைகளையே சார்ந்துள்ளார்கள். நமக்குப் பயன்படாத பொருட்களை பிறருடைய பயன்பாட்டுக்கு கொடுத்துவிடுவது நல்லது. ஆனால் நாம் அனுதினமும் பயன்படுத்தும் விலையுயர்ந்த பயனுள்ள பொருட்களை கொடுக்க பொதுவாக மனதில்லாமல் இருப்போம். பவுல் சிறைச்சாலையிலிருந்த பொழுது நம்பக் கூடிய சிநேகிதர்களின் ஊக்கமும், உறவும் தேவைப்பட்டது. ஆனாலும் அவருக்கு மிக நெருங்கிய இரு சிநேகிதர்களை பிலிப்பு பட்டணத்திலுள்ள விசுவாசிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவி செய்ய…

தரித்திரரை நினைத்துக் கொள்ளுங்கள்

1780ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ் லண்டன் மாநகரைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழை பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அந்தப் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் யாரும் உதவி செய்யவில்லை என்பதைக் கவனித்து அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்கு பள்ளிகளை திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தைப் பாடப்புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக்குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுத்து வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்குப் போதித்தார்கள். விரைவில் 100 குழந்தைகள்…

“புது சிருஷ்டி”

எனது பணியின் ஆரம்ப நாட்களில் என்னுடன் பணிசெய்த நபர் ஒருவர் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதில் மகிழ்ச்சி அடைபவனாக இருந்தான். புதிதாக கிறிஸ்தவ விசுவாசத்தில் வந்தவர்கள் அல்லது அவனுடைய இயேசுவைப் பற்றி பேச முயற்சி செய்த அனைவரையும் சிறிது கூட இரக்கமின்றி வெறுப்பூட்டுகிற வார்த்தைகளினால் பழித்துக் கூறுவான். ஒருநாள் நான் அந்த வேலையை விட்டுவிட்டு வேறொரு இடத்தில் புதிய வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று அந்த மனிதன் ஒருக்காலும் இயேசுவைப் பின்பற்றுகிறவராக மாற இயலாது என்று எண்ணினதை நினைவு கூருகிறேன்.

இரண்டு ஆண்டுகள் கழித்து…

முதல் அடி

ஒரு நாள் எனது சிநேகிதி என்னை வழியில் நிறுத்தி அவளது அண்ணனுடைய ஒரு வயது குழந்தை நடப்பதற்காக எடுத்து வைத்த முதல் அடியைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டாள். அவனால் நடக்க முடிகிறதென்று ஆச்சரியத்துடன் கூறினாள். அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவருக்கு எங்களுடைய வார்த்தைகள் எவ்வளவு வினோதமாக இருந்திருக்குமென்று பின் நாட்களில் எண்ணிப் பார்த்தேன் உலகிலுள்ள அநேக மக்களுக்கு நடக்க இயலும் அது என்ன பெரிய காரியம்?.

குழந்தைப் பருவம் சிறப்புத் தன்மைகளை உடையதாகவுள்ளது. ஆனால் அத்தன்மைகள் வாழ்க்கையின் பின் பகுதியில்…

பின்னடைவிலும் நன்மைகள்

1984 – 2008 வரை நடந்த ஐந்து வேறு, வேறு ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த டாரா டோரஸ் தனிச்சிறப்பு வாய்ந்தவராக இருந்தார். பின் நாட்களில் 50 மீட்டர் ப்ரிஸ்டைல் நீச்சல் போட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அவள் ஏற்படுத்திய சாதனையை அவளே உடைத்தெறிந்தாள். ஆனால் எப்பொழுதுமே பதக்கங்களும் சாதனைகளுமல்ல அவள் ஒரு விளையாட்டு வீரராக காயமடைதல், அறுவை சிகிச்சைக்கு உட்படுதல், போட்டிபோடும் மற்றவர்களைவிட இரண்டு மடங்கு வயதுடைய நிலைமை ஆகிய அநேக தடைகளை அவள் சந்தித்தாள். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே ஒவ்வொரு…

ஆச்சரியம் ஏதுமில்லை

“அவன் உனக்கு பொருத்தமானவன்” என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். அவள் அப்பொழுதுதான் சந்தித்த ஒரு மனிதனைப் பற்றி அப்படிக் கூறினாள். அந்த மனிதனது அன்பான கண்கள், அன்பான சிரிப்பு, அன்பான உள்ளம் ஆகியவற்றை அவள் விவரித்தாள். அவனை நான் சந்தித்தபொழுது, அவனது விருப்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இன்று அவன் எனது கணவர். அவரை நேசிப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

உன்னதப்பாட்டில் மணவாட்டி அவளது நேசரை விவரிக்கிறாள். அவனுடைய நேரம் திராட்சரசத்தைவிட இன்பமானது. பரிமளதைலங்களைவிட வாசனை நிறைந்தது. அவனுடைய நாமம் உலகிலுள்ள அனைத்து நாமங்களிலும் இன்பமானது.…

மீன் பிடிப்பதில் ஒரு பாடம்

பியட் ஏரியில் பசுமையாக இருந்த நீர்ச்செடிகள் நிறைந்த பகுதிக்கு அருகில் தெளிவான அமைதியான நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அடர்த்தியான செடிகளுக்குள்ளிருந்து ஒரு சிறிய வாயுடைய பெரிய பாஸ் வகை மீன் சுற்றுப்புறத்தை ஆராய மெதுவாக எட்டிப் பார்த்ததை கவனித்தேன். எனது தூண்டிலில் மாட்டப்பட்டிருந்த உணவு அதற்கு ஆசையை உண்டாக்கினதினால் அதன் அருகில் வந்து உற்று நோக்கியபின் அது மறுபடியும் செடிகளுக்குள்ளே சென்று விட்டது. தூண்டியில் மாட்டியிருந்த தூண்டில் முள்ளைப் பார்க்கும் வரைக்கும் இந்நிகழ்ச்சி பலமுறை நடந்தது. தூண்டில் முள்ளைக் கண்டவுடன் தனது வாலை…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

செய்ய அல்லது செய்யக்கூடாதவை

நான் சிறுவனாக இருந்தபோது, இரண்டாம் உலகப் போரில் செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு பீரங்கி என் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அவ்வாகனத்தின் மீது ஏறுவதிலுள்ள ஆபத்து குறித்துப் பல எச்சரிப்பு குறிகள் இருந்தன. ஆனால் எனது நண்பர்கள் இருவரும் உடனடியாக துடிப்போடு ஏறினர். எங்களில் சிலர் சற்று தயக்கம் காட்டினாலும், இறுதியில் நாங்களும் அவ்வாறே செய்தோம். ஒரு சிறுவன் பதிவிடப்பட்ட எச்சரிப்புகளைக் காட்டி மறுத்துவிட்டான். ஒரு பெரியவர் நெருங்கியதும், இன்னொருவன் வேகமாகக் கீழே குதித்தான். விதிகளைப் பின்பற்றுவதற்கான எங்கள் விருப்பத்தை விட விளையாடும் ஆசை அதிகமாக இருந்தது.

நம் அனைவருக்குள்ளும் குழந்தைத்தனமான முரட்டாட்ட சுபாவம் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறப்பட்டால் நமக்குப் பிடிக்காது. ஆயினும் எது சரியானது என்பதை அறிந்து அதைச் செய்யாவிடில் அது பாவம் (4:17) என்று யாக்கோபில் வாசிக்கிறோம். ரோமரில், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (7:19-20).

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் பாவத்துடன் போராடுவது புதிராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாம் சரியானதைச் செய்வதற்கு நம் சொந்த பலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறோம். ஒரு நாள், இந்த வாழ்க்கை முடிவடையும் போது, நாம் உண்மையிலேயே பாவத் தூண்டுதல்களுக்கு மரித்திருப்போம். எவ்வாறாயினும் அதுவரை, தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தின் மீதான வெற்றியை வென்றவரின் வல்லமையை நாம் நம்பலாம்.

தேவனுக்கு வேறு திட்டங்கள் இருந்தன

அவர்களின் துல்லியமான வயது தெரியவில்லை. தேவாலயத்தின் படிகளில் ஒருத்தி கண்டெடுக்கப்பட்டாள்; மற்றவளுக்கோ அவள் கன்னியாஸ்திரீகளால் வளர்க்கப்பட்டவள் என்பது மட்டுமே தெரியும். இரண்டாம் உலகப் போரின்போது போலந்தில் பிறந்து, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளாக ஹலினா அல்லது கிறிஸ்டினா ஒருவரையொருவர் பற்றி அறிந்திருக்கவில்லை. பின்னர் மரபணு பரிசோதனை முடிவுகள் அவர்கள் சகோதரிகள் என்பதை வெளிப்படுத்தியது, மற்றும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைவதற்கு வழிவகுத்தது. இது அவர்களின் யூத பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தியது அவர்கள் ஏன் கைவிடப்பட்டனர் என்பதை விளக்குகிறது. தீயவர்கள் சிறுமிகளை அவர்களின் அடையாளத்தின் காரணமாகக் கொல்ல முயன்றிருந்தனர்..

பயந்துபோன ஒரு தாய், சாகப்போகும் தன் குழந்தைகளை அவர்கள் மீட்கப்படக்கூடிய இடத்தில் விட்டுவிடுவது என்பதைக் கற்பனை செய்தால், மோசேயின் கதையை நினைவுபடுத்துகிறது. ஒரு எபிரேய ஆண் குழந்தையாக, அவர் இனப்படுகொலைக்காகக் குறிக்கப்பட்டார் (யாத்திராகமம் 1:22 ஐப் பார்க்கவும்). அவரது தாயார் தந்திரமாக அவரை நைல் நதியில் விட்டுவிட்டார் (2:3), அவருக்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். மோசேயின் மூலம் தம்முடைய மக்களை மீட்பதற்கு அவள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு திட்டத்தைத் தேவன் வைத்திருந்தார்.

அமைதிக்கான அழுத்தம்

வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.

நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.

பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.